Published : 01 Mar 2016 10:51 AM
Last Updated : 01 Mar 2016 10:51 AM
உலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர், மகளிர் பிரிவில் இந்திய அணி 3வது சுற்றுக்கு முன்னேறியது.
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆடவர் அணி துருக்கியை எதிர்கொண்டது. இதில் இந்தியாவின் சரத் கமல் 11-5, 11-5, 11-7 என்ற கணக்கில் இப்ராஹிமையும், சவுமியாஜித் கோஸ் 11-8, 11-6, 11-7 என்ற கணக்கில் ஜென்ஹே மென்ஜியை யும், அந்தோனி அமல்ராஜ் 11-3, 11-4, 11-6, 11-7 என்ற கணக்கில் அப்துல்லா ஜென்லெரையும் தோற் கடித்தனர். இந்திய ஆடவர் அணி 3வது சுற்றில் நைஜிரியாவை சந்திக்கிறது. மகளிர் பிரிவில் இந்தியா, புயிர்டோ ரிகோவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT