Published : 19 Jun 2014 03:30 PM
Last Updated : 19 Jun 2014 03:30 PM

உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்ல விராட் கோலி விருப்பம்

உலகக் கோப்பைக் கால்பந்துக் காய்ச்சல் கிரிக்கெட் விரர்களையும் தொற்றிக் கொண்டது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த முறை ஜெர்மனி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி அன்று போர்ச்சுகலை வீழ்த்திய போது முல்லரின் ஹேட்ரிக்கை வியந்தோதி ட்வீட் செய்திருந்தார் கோலி.

ஜெர்மனி வீரர் பிலிப் லாம் என்பவரது விசிறி நான் என்று கூறிய கோலி, “இவருடைய பணி நேர்த்தி எனக்கு பிடித்தமானது. இவர்தான் ஜெர்மனி அணிக்கு நிறைய வெளிகளை உருவாக்கித் தருகிறார்.

இந்த முறை ஜெர்மனி உலகக் கோப்பை வெல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனெனில் அந்த அணி அபாயகரமான அணியாக திகழ்கிறது. இந்த ஆண்டு ஜெர்மனியின் ஆண்டாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

மேலும் எனக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி, ஆகியோரது ஆட்டமும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார் கோலி.

மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கால்பந்து பயிற்சியில் ஈடுபடும்போது ரவீந்திர ஜடேஜா தன்னை ரொனால்டோவாக நினைத்துக் கொள்வார் என்று கூறியதோடு, "இந்திய அணியின் வேடிக்கையான கால்பந்தாட்ட வீரர் ஜடேஜா". நான் நடுக்களத்தில் ஆடுவேன், சில சமயங்களில் முன்களத்தில் ஆடி சில கோல்களை அடிக்க முயற்சி செய்வதும் உண்டு. ஏனெனில் ஒருமுறை ஜடேஜாவிடம் பந்து சென்றால் திரும்பவும் நமக்குக் கிடைக்காது.

ஆனாலும் இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த கால்பந்தாட்ட வீரர் கேப்டன் தோனிதான்” என்கிறார் விராட் கோலி

ஏற்கனவே கம்பீரும் ஜெர்மனிதான் சாம்பியன் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x