Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் துபாயில் இன்று தொடக்கம்: சிஎஸ்கே - மும்பை அணிகள் மோதல்

துபாய்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி 20 கிரிக்கெட்தொடர் துபாயில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்புசாம்பியனான மும்பை இந்தியன்ஸ், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் தீவிரம்

சென்னை அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. மேற்கொண்டு 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் சென்னைஅணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். அதேவேளையில் மும்பை அணி 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க வேண்டிய நிலையில் மும்பை அணி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x