Published : 13 Feb 2016 09:17 AM
Last Updated : 13 Feb 2016 09:17 AM
பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ஆசாத் ரவுப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ஊழல் மற்றும் தவறான நடத்தைகளுக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிசிசிஐ மற்றும் பிசிசிஐயின் அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான போட்டிகளிலும் ஆசாத் ரவுப் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடுவராக பணியாற்ற முடியாது.
கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் டி 20 தொடரில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பான வழக்கில் மும்பை காவல்துறையினர் ஆசாத் ரவுப்பை தேடப் படும் குற்றவாளியாக அறிவித் துள்ளனர். மேலும் இந்த தொடரின் போது சூதாட்டத்தரகர்களிடம் இருந்து ஆசாத் ரவுப் விலை உயர்ந்த பொருட்களை பரிசாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. மேலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஆசாத் ராவுப்பை ஒழுங்கு நடவடிக்கை குழு இரு முறைகேட்டுக்கொண்டது.
ஆனால் ஆசாத் ரவுப் நேரில் வர மறுத்து விளக்க கடிதம் ஒன்றை அனுப்பினார். இதனை ஏற்க பிசிசிஐ மறுத்தது. இந்நிலையில் மும்பையில் நேற்று கூடிய பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை குழு ஆசாத் ரவுப்பிற்கு 5 ஆண்டு கள் தடைவிதித்து உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT