Published : 26 Aug 2021 03:13 AM
Last Updated : 26 Aug 2021 03:13 AM

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

டோக்கியோ

ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் கிளாஸ் 4 பிரிவில் இந்தியாவின் பவினாபென் ஹஸ்முக்பாய் படேல் முதல் சுற்றில் சீனாவின் ஜூ யிங்கை எதிர்த்து விளையாடினார். இதில் 2008 மற்றும் 2012-ம் ஆண்டு பாராலிம்பிக் சாம்பியனான ஜூ யிங், 11-3, 11-9, 11-2 என்ற நேர் செட்டில் பவினாபென்னை வீழ்த்தினார். ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பவினாபென் தனது அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் மேகன் ஷாக்லெட்டனுடன் இன்று மோதுகிறார்.

முன்னதாக மகளிருக்கான கிளாஸ் 3 பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சோனல்பென் மனுபாய் படேல், சீனாவின் கியான்லியை எதிர்கொண்டார். 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கியான் லி 9-11, 11-3,15-17, 11-7, 11-4 என்ற செட் கணக்கில் சோனல்பென்னை வீழ்த் தினார். டி பிரிவில் இடம் பிடித்துள்ள சோனல்பென் அடுத்த ஆட்டத்தில் இன்று தென்கொரியா வின் மி கியு லீயுடன் மோதுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x