Published : 02 Feb 2016 03:22 PM
Last Updated : 02 Feb 2016 03:22 PM
எதிர்வரும் டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறிய லாரா, மேற்கிந்திய அணியும் அச்சுறுத்தலாகத் திகழும் என்றார்.
துபாயில் பத்திரிகை பேட்டி ஒன்றில் லாரா கூறும்போது, "தங்கள் நாட்டில் இந்தியாவே வெல்லும் என்று நான் நினைக்கிறேன். மேலும் இந்திய அணி தற்போது உலகின் சிறந்த அணிகளுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே இந்திய அணி வெல்லும் என்பதே எனது கணிப்பு.
ஆனால் மேற்கிந்திய அணியைப் பற்றியும் நாம் பேசியாக வேண்டும், அவர்கள் சிறந்த அணியைத் தேர்வு செய்துள்ளார்கள் எனவே மற்ற அணிகளுக்கு இது கவலையளிப்பதாகவே அமையும். வீரர்கள் ஒற்றுமையுடன் ஆக்ரோஷமாக ஆடினால் மே.இ.தீவுகளும் கோப்பையை வெல்லும் அணியின் பட்டியலில் இருக்கும்.
கிறிஸ் கெயில், டேரன் பிராவொ, கெய்ரன் பொலார்ட் உள்ளிட்டவர்கள் இணையும் போது அவர்களிடையே கெமிஸ்ட்ரி உள்ளது. இவர்கள் நிச்சயம் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள்.
ஆனால் சில வேளைகளில் மே.இ.தீவுகள் அணி சீரற்ற முறையில் விளையாடுவதையும் பார்த்து வருகிறோம். எனவே வெஸ்ட் இண்டீஸைப் பொறுத்தவரை எதுவும் கணிக்க முடியவில்லை” என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி குரூப் 1-ல் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் தகுதிச்சுற்று அணி ஒன்று ஆகியவற்றுடன் உள்ளது. இது கடினமான பிரிவே.
பிரதான போட்டிகளுக்கு முன்னதாக இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது மே.இ.தீவுகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT