Published : 22 Feb 2016 07:07 PM
Last Updated : 22 Feb 2016 07:07 PM
வங்கதேசத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்டுக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனிக்கு முதுகில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் எச்சரிக்கை நடவடிக்கையாக விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் பார்த்திவ் படேல் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
“இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் தோனிக்கு பயிற்சியின் போது முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்த்திவ் படேல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் டாக்காவில் அணியுடன் விரைவில் இணையவிருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டில் இரண்டு டி20 போட்டிகளில் பார்த்திவ் படேல ஆடியுள்ளார். இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்து தன்னை நிரூபித்து வருகிறார்.
ஆசியக்கோப்பை டி20-யைத் தொடர்ந்து உலகக்கோப்பை டி20 இருப்பதால் தோனியின் உடற்தகுதி அணிக்கு மிக முக்கியம் என்பதால் பாதுகாப்பாக பார்த்திவ் படேல் அழைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT