Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பராகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா.
பிரேசிலின் பிரேசிலியா நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில் கைடோ ரோட்ரிக்ஸ் உதவியுடன் பந்தை பெற்ற பப்பு கோமஸ் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி உதைத்தார்.
ஆனால் பந்து கோல்கம்பத் துக்கு மேலே சென்று ஏமாற்றம் அளித்தது. அடுத்த நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த அருமையான வாய்ப்பை அர்ஜென்டினாவின் செர்ஜியோ அகுரோ தவறவிட்டார். இருப் பினும் 10-வது நிமிடத்தில் அர் ஜென்டினா தனது முதல் கோலை அடித்தது.
ஏஞ்சல் டி மரியா உதவியுடன் பந்தைபெற்ற பப்புகோமஸ் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்துகோல்கம்பத்தின் மையப்பகு தியை துளைக்க அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.
இதன் பின்னர் மேற்கொண்டு கோல்கள் ஏதும் அடிக்கப்படவில்லை. முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அர்ஜென்டினா 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
முன்னதாக இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத் தில் உருகுவே - சிலி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. 26-வது நிமிடத்தில் சிலி வீரர் எட்வர்டோ வர்காஸ் கோல் அடித்தார்.
66வது நிமிடத்தில் சிலி வீரர் அர்துரோ விடால், சுயகோல் அடிக்க பெரு அணி ஆட்டத்தை டிராவில் முடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT