Last Updated : 20 Jun, 2021 03:12 AM

 

Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: டைசன் வளர்த்த புலி

பொதுவாக நாய், பூனை, மீன்கள் போன்றவற்றை மக்கள் செல்லப் பிராணிகளாக வளர்ப்பார்கள். ஆனால் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், இதில் கொஞ்சம் வித்தியாசமானவர். செல்லப்பிராணியாக அவர் புலியை வளர்த்துள்ளார்.

1990-களில் புலியை வளர்க்கும் ஆசை மைக் டைசனுக்கு வந்துள்ளது. 71 ஆயிரம் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட அந்த புலிக்கு, ‘கென்யா’ என்று பெயரிட்டார். அந்த புலிக்காக மாதம் ரூ.4 ஆயிரம் டாலர்களை மைக் டைசன் செலவிட்டார். சில சமயங்களில், ஒரே கட்டிலில் அந்தப் புலியுடன் தூங்கியுள்ளார்.

பொழுது போகாத நேரங்களில் புலியுடன் விளையாடுவது, வாக்கிங் போவது என்று உற்சாகமாக இருந்துள்ளார். இதைப் பார்த்த அவரது பக்கத்து வீட்டுப் பெண்மணிக்கும், அந்தப் புலியுடன் ஆட ஆசை வந்துவிட்டது. ஒருநாள் டைசனின் வீட்டுக்குள் சுவர் மீது ஏறிக் குதித்து, அந்தப் புலிக்கு அருகில் சென்றுள்ளார்.

டைசனைத் தவிர மற்றவர்களிடம் நெருங்கிப் பழகாத அந்தப் புலிக்கு, தன்னை யாரோ சீண்டுவது கோபத்தை எற்படுத்தி உள்ளது. அந்தப் பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளது. அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிய அந்தப் பெண், பிறகு இதுதொடர்பாக டைசன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் பின்னர், டைசன் வீட்டுக்குள் அவர் அத்துமீறிச் சென்றது பற்றி கேள்வி எழ, அந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ‘கென்யா’ என்ற புலியை வளர்த்த டைசன், மேலும் 2 புலிகளையும் பிற்காலத்தில் வளர்த்துள்ளார். பின்னர் ஒருமுறை அவை தன்னை தாக்கியதாலும், பொருளாதார நிலை காரணமாகவும் அவற்றை விற்றுவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x