Published : 10 Dec 2015 09:17 AM
Last Updated : 10 Dec 2015 09:17 AM
ஐரோப்பிய சாம்பியன் லீக் தொடரில் குரூப் அணிகளுக்கு இடையே லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மால்மோ எப்.எப். அணியை எதிர்கொண்டது.
இதில் ரியல் மாட்ரிட் 8-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தனது பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.12-வது நிமிடத்தில் பென்சிமா முதல் கோலை அடித்தார். 24-வது நிமிடத்தில் அவர் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் 2-0 என முன்னிலைப் பெற்றது.
அதன்பின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 39, 47, 50 மற்றும் 58-வது நிமிடத்தில் தொடர்ச்சியாக நான்கு கோல்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் தொடர்ச்சியாக நான்கு கோல்கள் அடித்த தனது சாதனையை முறியடித்தார். இந்த தொடரில் அவர் 11 கோல்கள் அடித்துள்ளார். இதற்கு முன்னர் ரொனால்டா 2013-2014ல் நடைபெற்ற தொடரில் 9 கோல் அடித்திருந்த தனது சாதனையை முறியடித்தார்.
74-வது நிமிடத்தில் பென்சிமா மீண்டும் ஒரு கோல் அடித்தார். அந்த அணியின் கோவாசிக் 70-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் லீக் போட்டிகள் முடிவில் 5 வெற்றி ஒரு டிரா மூலம் 16 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது ரியல் மாட்ரிட். ஐரோப்பிய சாம்யின் லீக் தொடரில் ஒரு அணி அதிக கோல்கள் அடித்து வெற்றி பெறுவது இது 2வது முறையாகும். இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு லிவர்பூல் அணி 8-0 என வென்றிருந்தது.
மான்செஸ்டர் தோல்வி
பி பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைட்டெடு-உல்ஷ்பெர்க் அணிகள் மோதின. இதில் உல்ஷ்பெர்க் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT