Last Updated : 29 May, 2021 03:11 AM

 

Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM

விளையாட்டாய் சில கதைகள்: அண்ணன் காட்டிய வழியில்

இந்தியாவில் தடகளப் போட்டிகளில் பெண்கள் சாதித்த அளவுக்கு ஆண்கள் சாதித்ததில்லை என்று சொல்லலாம். இந்நிலையில், இந்த வரலாற்றை மாற்றி எழுத வந்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 17 வயது இளம் வீரரான முகமது ஹனான்.

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள தானூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹனான், காலிகட் பல்கலைக்கழகத்தில் நடந்த 110 மீட்டர் தூர தடை ஓட்டத்தில், பந்தய தூரத்தை 13.80 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 110 மீட்டர் தூர தடையோட்டத்தில், பந்தய தூரத்தை விரைவாகக் கடந்த உலகின் மூன்றாவது இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் உள்ளனர்.

தானூரில், ஒரு கார் ஓட்டுநருக்கு மகனாக பிறந்தவர் முகமது ஹனான். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வந்த ஹனானின் அண்ணனான முகமது ஹர்ஷத், தனது தம்பிக்கு தீவிரமாக பயிற்சிகளை அளித்து வந்துள்ளார்.

தானூரில் உள்ள கடற்கரைதான் ஹனானின் முதல் பயிற்சிக் களமாக இருந்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் தினமும் 13 கிலோ மீட்டர் தூரம்வரை ஓடி, ஹனான் பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் தனது தம்பிக்கு இன்னும் சிறப்பான பயிற்சி கிடைக்க வேண்டும் என்று விரும்பிய ஹனானின் அண்ணன், அவரை திரூரில் உள்ள ராஜீவ் காந்தி நகராட்சி மைதானத்தில் பயிற்சி பெற வைத்துள்ளார்.

இதன்பிறகு ஹனான் தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறார். குவாஹாட்டியில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த தேசிய ஜூனியர் விளையாட்டுப் போட்டியில், இவர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x