Last Updated : 17 May, 2021 03:12 AM

 

Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: இந்திய கிரிக்கெட்டின் புதிய நட்சத்திரம்

இந்திய கிரிக்கெட்டில் புதிதாக தோன்றியிருக்கும் நட்சத்திரம் அர்சான் நக்வஸ்வாலா. இங்கிலாந்தில் நடக்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆடும் இந்திய அணியின் ஸ்டாண்ட் பை வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நக்வஸ்வாலா. இதுவரை பெரிய அளவில் எந்த போட்டியிலும் ஆடாத இந்த நக்வஸ்வாலா யார் என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் 1997-ம் ஆண்டு பிறந்தவர் நக்வஸ்வாலா. இவர் பார்ஸி இனத்தை சேர்ந்தவர். இதன்மூலம் 45 ஆண்டுகள் கழித்து, அதாவது முன்னாள் விக்கெட் கீப்பரான பரூக் இன்ஜினீயருக்கு பிறகு, இந்திய அணிக்காக ஆடும் முதல் பார்ஸி இனத்தை சேர்ந்த வீரர் என்ற பெருமையை நக்வஸ்வாலா பெற்றுள்ளார்.

குஜராத் அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்த நக்வஸ்வாலா, முதல்முறையாக தேர்வாளர்களின் பார்வையில் விழுந்தது 2018-19 ஆண்டில்தான். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர், இந்த ஆண்டில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, 2019-20 ஆண்டில் குஜராத் அணிக்காக 8 போட்டிகளில் 41 விக்கெட்களை கொய்துள்ளார்.

மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் சிறப்பாக பந்துவீசி, பேட்ஸ்மேன்களை சாய்க்கும் ஆற்றல் வாய்ந்தவர் நக்வஸ்வாலா. கடந்த ஐபிஎல் போட்டியில் இவரை யாரும் வாங்கவில்லை. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணி, தங்கள் நெட் பவுலராக இவரைப் பயன்படுத்தி வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் ஜாஹிர் கான் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் அறிமுகம் கிடைக்க, தனது ஆற்றலை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தச் சூழலில் இங்கிலாந்துக்கு செல்லும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x