Published : 12 Dec 2015 09:03 AM
Last Updated : 12 Dec 2015 09:03 AM

ஐஎஸ்எல் முதல்கட்ட அரையிறுதி: கோவாவை வீழ்த்தியது டெல்லி அணி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் கட்ட அரையிறுதி ஆட்டத்தில் நேற்று டெல்லி டைனமோஸ்-எப்.சி. கோவா அணிகள் டெல்லியில் மோதின. கோவா 3-5-2 என்ற பார்மட்டிலும், டெல்லி 4-4-1-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் டெல்லி முதல் கோலை அடித்தது. அந்த அணியின் ஆண்டர்சன் சிக்கோ கொடுத்த கிராஸை தலையால் முட்டி ராபின் சிங் கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் டெல்லி அணி 1-0 என முன்னிலைப்பெற்றது.

2வது பாதியில் இரு அணி களும் போராடினாலும் கோல்கள் அடிக்கப்படவில்லை. முடிவில் டெல்லி அணி 1-0 என்ற கோல் கணக் கில் வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் அரையிறுதியின் 2-வது கட்ட போட்டியில் 16ம் தேதி மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின் றன. இதில் அடிக்கப்படும் கோல் களின் சராசரி அடிப்படையில் இறுதி போட்டிக்கு முன்னேறும் அணி முடிவு செய்யப்படும்.

புனேவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி- அட்லெடிக்கோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x