Published : 23 Dec 2015 08:57 AM
Last Updated : 23 Dec 2015 08:57 AM
12வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் குவாஹாட்டியில் பிப்ரவரி 6ம் தேதி முதல் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தொடர் கூடுதலாக ஒருநாள் நடத்தப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி போட்டிகள் 5ம் தேதி தொடங்குகிறது.
தெற்கு ஆசிய போட்டியில் மொத்தம் 23 போட்டிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் போட்டி முடிவடைய அதிக நேரம் ஆகும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
தொடக்க விழா மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் குவாஹாட்டியில் உள்ள ஷருஜாய் இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
சில்லாங்கில் வில்வித்தை, பாட்மிண்டன், குத்துச்சண்டை, ஜூடோ, டேபிள் டென்னிஸ், தேக் வாண்டோ, வூசு, மகளிர் கால்பந்து போட்டிகள் நடைபெறுகிறது.
குவாஹாட்டியில் தடகளம், கூடைப்பந்து, சைக்கிள் பந்தயம், ஹேண்ட்பால், ஹாக்கி, கபடி, கோ-கோ, துப்பாக்கிச்சுடுதல், ஸ்குவாஸ், நீச்சல், டென்னிஸ், டிரையத்லான், கைப்பந்து, மல் யுத்தம், பளு தூக்குதல், ஆடவர் கால்பந்து உள்ளிட் 16 போட்டிகள் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT