Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில், மறக்க முடியாத நாள் ஏப்ரல் 18, 1986.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போட்டிகளில் 1986-ம் ஆண்டுவரை இந்தியாவின் பக்கமே காற்று வீசிக்கொண்டு இருந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான போட்டிகளில் அதிகமாக இந்தியாவே ஜெயித்துக்கொண்டு இருந்தது. அந்தக் காற்றை பாகிஸ்தான் பக்கம் ஜாவீத் மியான்தாத் திருப்பிய நாள் என்று இந்நாளைச் சொல்லலாம்.
1986-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த ஆஸ்திரல் - ஏஷியா கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 245 ரன்களை எடுத்தது. அடுத்து வந்த பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களை எடுத்திருந்த நேரத்தில் மியான்தாத் களம் இறங்கினார். ஒருபுறம் பாகிஸ்தான் அணி வரிசையாய் விக்கெட்களை இழக்க, மறுபுறம் தூண்போல் உறுதியாய் நின்றார் மியான்தாத்.
இப்போட்டியின் கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிபெற 8 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரை வீச வந்த சேதன் சர்மா, முதல் 5 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில் சேதன் சர்மா வீசிய பவுன்ஸரை சிக்ஸருக்கு விரட்டினார் ஜாவித் மியான்தத். இப்போட்டியில் 116 ரன்கள் குவித்து, பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்தார்.
இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் தாக்கம், பல ஆண்டுகளுக்கு இந்தியாவை பாதித்தது. 2000-ம் ஆண்டில் கேப்டன் கங்குலி தலையெடுத்த பின்னரே இந்திய அணி பாகிஸ்தானை மீண்டும் வெல்லத் தொடங்கியது. பின்னர் தோனியின் காலத்தில், பாகிஸ்தான் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT