Published : 11 Jun 2014 03:19 PM
Last Updated : 11 Jun 2014 03:19 PM
ஆஸ்திரேலியா செல்லும் இந்தியா ஏ அணிக்கு ராபின் உத்தப்பா, மனோஜ் திவாரி ஆகியோர் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ராபின் உத்தப்பா 4 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டித் தொடருக்கும், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 4 நாள் போட்டிகளுக்கு மனோஜ் திவாரி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முறை உள்நாட்டுத் தொடர் அனைத்தையும் கர்நாடகா வென்றுள்ளது. ரஞ்சிக் கோப்பை, இரானி டிராபி, விஜய் ஹசாரே டிராபி, ஆகியவற்றை கர்நாடகா வென்றுள்ளது. ஆனால் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஒரு கர்நாடகா வீரர் கூட இல்லை.
ஆனால் இந்தியா ஏ அணியில், ராபின் உத்தப்பா, மணிஷ் பாண்டே, கே.எல்.ராகுல், கருண் நாயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மற்றும் பிற அணிகளிலிருந்து ரிஷி தவான், சஞ்சு சாம்சன், தவால் குல்கர்னி, சந்தீப் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
4 நாள் போட்டிக்கான இந்திய ஏ அணி வருமாறு:
மனோஜ் திவாரி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஜிவாஞ்ஜோத் சிங், ராபின் உத்தப்பா, அம்பாத்தி ராயுடு, கருண் நாயர், நமன் ஓஜா, பிராக்யன் ஓஜா, உமேஷ் யாதவ், தவால் குல்கர்னி, அனுரீத் சிங், ரஜத் பாலிவல், அமித் மிஸ்ரா, சந்தீப் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, பாபா அபராஜித்.
ஒருநாள் போட்டித் தொடருக்கான அணி:
உத்தப்பா (கேப்டன்), உன்முக்த் சந்த், மணீஷ் பாண்டே, ராயுடு, மனோஜ் திவாரி, கேதர் ஜாதவ், சஞ்சு சாம்சன், பர்வேஸ் ரசூல், அக்ஷர் படேல், தவால் குல்கர்னி, ரிஷி தவான், மோகித் சர்மா, கரன் சர்மா, ராகுல் சுக்லா, மனன் வோரா, ஜெய்தேவ் உனட்கட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT