Published : 19 Nov 2015 09:08 AM
Last Updated : 19 Nov 2015 09:08 AM

ஐஎஸ்எல்: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்சி-அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் சென்னை அணி முதல் கோலை அடித்தது. அகஸ்டின் பெர்னான்டஸ் உதவியுடன் இந்த கோலை ரபேல் அகுஸ்டோ அடித்தார்.

45வது நிமிடத்தில் கொல்கத்தா அணி பதில் கோல் அடித்தது. காவிலன் கொடுத்த கிராஸ் கோல் கம்பம் அருகே நின்ற வீரர்களால் தடுக்கப்பட்டு எதிர்புறம் வந்தது. இதை பயன்படுத்தி கண்னிமைக்கும் நேரத்தில் கொல்கத்தா வீரர் ஷமிக் டூட்டி கோல் அடித்தார். 63வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ஹூமி, ஷமிக் டூட்டி கொடுத்த கிராஸை, சென்னை வீரர்களை ஏமாற்றி கோலாக மாற்றினார்.

முடிவில் கொல்கத்தா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x