Last Updated : 30 Mar, 2021 03:14 AM

 

Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: தடகள உலகின் புதிய நட்சத்திரம்

இந்திய தடகள உலகில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் எம்.சங்கர். சில நாட்களுக்கு முன் நடந்த நீளம் தாண்டும் போட்டியில் 8.26 மீட்டர் நீளம் தாண்டி புதிய தேசிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரின் இந்த சாதனைக்கு, அவரது பெற்றோரும் ஒரு காரணம். சங்கரின் அப்பா முரளி, அம்மா பிஜிமோள் ஆகியோர் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் பல தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி கூறும் சங்கர், “சிறுவயது முதலே நான் விளையாட்டுகளின் மீது காதலோடு இருந்தேன். என் பெற்றோர் இருவரும் தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றிருந்தது எனக்கு தூண்டுகோலாக இருந்தது. அத்துடன் என் உறவினர்கள் பலரும் தடகள உலகில் இருந்ததால், சிறு வயதில் இருந்தே எனக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம்” என்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் ஓட்டப்பந்தய வீரராகத்தான் குமார் இருந்துள்ளார். ஜூனியர் அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். இந்த காலகட்டத்தில் நீளம் தாண்டுதல் மற்றும் ட்ரிபிள் ஜம்ப் வீரரான சங்கரின் அப்பாதான் அவரை நீளம் தாண்டும் போட்டிகளில் பங்கேற்குமாறு ஊக்கப்படுத்தியுள்ளார்.

10-ம் வகுப்பு படிக்கும் காலத்தில் நீளம் தாண்டும் போட்டிகளில் பயிற்சி பெறத் தொடங்கிய சங்கர், தனது அப்பா காட்டிய வழியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். ஆரம்பத்தில் தனது அப்பாவிடம் பயிற்சி பெற்ற சங்கர், பின்னர் வெளிநாட்டு பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய சங்கர், தற்போது இந்தியாவில் இதுவரை யாரும் தாண்டாத அளவுக்கு நீளம் தாண்டி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். இதேபோல் ஒலிம்பிக் போட்டியில் அனைத்து நாடுகளையும் அவர் கவர்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x