Last Updated : 24 Nov, 2015 09:58 AM

 

Published : 24 Nov 2015 09:58 AM
Last Updated : 24 Nov 2015 09:58 AM

இந்தியா- பாகிஸ்தான் தொடரை இலங்கையில் நடத்த திட்டம்: 27ம் தேதி அறிவிப்பு வெளியாகிறது

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையேயான கிரிக்கெட் தொடரை இலங்கையில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் அணி கள் இடையே அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து கிரிக்கெட் தொடர் நடத்த திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் பிசிசிஐ, ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாட மறுப்பு தெரிவித்தது. மேலும் பாகிஸ்தான் அணியை இந்தியாவில் வந்து விளையாட அழைப்பு விடுத்தது. உள்நாட்டு தொடருக்கான இழப் பீடு தொகையையும் வழங்க முன்வந்தது. ஆனால் பாக். வாரியம் இந்த கோரிக்கையை நிராகரித்தது.

இந்நிலையில் இரு அணி கள் இடையேயான தொடரை பொது வான இடமாக இலங்கையில் நடத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கென திட்டமிட்டிருந்த 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, இரண்டு டி 20 தொடருக்கு பதிலாக 3 ஒருநாள் போட்டி, இரண்டு டி 20 ஆட்டங்கள் கொண்டதாக இந்த தொடர் இருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிசிசிஐ தலைவர் ஷசாங் மனோகர், பாக். வாரிய தலைவர் ஷாஹார்யார் ஹான், மூத்த அதிகாரி நஜாம் ஆகியோருக்கு இடையே மத்தியஸ்தராக இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் கில்ஸ் கிளார்க் துபையில் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப் படுகிறது.

ஆனால் இதுதொடர்பாக ஷாஹார்யார் ஹானும், நஜாமும் எந்த தகவலையும் மீடியாக்களிடம் பகிரிந்து கொள்ள மறுத்துவிட்டனர். பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது என்று மட்டும் தெரி வித்தனர். இதனால் இந்தியா-பாக். தொடர் நடைபெறுவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஷாஹார்யார் ஹான், பாக். பிரதமர் நவாஷ் ஷெரிப்பை சந்தித்து ஒப்புதல் பெற முடிவு செய்துள்ளார். பாக். அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் வரும் 27ம் தேதி போட்டி தொடர்பாக கில்ஸ் கிளார்க் அறிவிப்பை வெளியிடுவார் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் தொடர், இலங்கையின் பிரேமதாஸா, பல்லேகேலே ஆகிய இரு மைதானங்களில் நடைபெறும் என தெரிகிறது. கடந்த 2009 முதல் பாகிஸ்தான் அணி உள்நாட்டு தொடரை ஐக்கிய அரபு அமீர கத்தில் வைத்து நடத்தி வருகிறது. பல்வேறு நாட்டு அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்று விளையாடி வரும் நிலையில் இந்தியா மட்டுமே முதன் முறையாக மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x