Last Updated : 30 Nov, 2015 06:18 PM

 

Published : 30 Nov 2015 06:18 PM
Last Updated : 30 Nov 2015 06:18 PM

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை அறிவுரையாளர் பொறுப்பிலிருந்து கும்ளே விலகல்

மும்பை இந்தியன்ஸ் ஐபிஅல் அணியின் தலைமை அறிவுரையாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ளே விலகியுள்ளார்.

கிரிக்கெட்டில் மற்ற வாய்ப்புகளை எதிர்நோக்கி கும்ளே இந்த முடிவை எடுத்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிக விக்கெட்டுகள் சாதனைக்குரியவரான அனில் கும்ளேவுக்கு மும்பை இந்தியன்ஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவர் அறிவுரையாளராக பொறுப்பேற்ற பிறகு மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றது, மேலும் 2015-ல் மீண்டும் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது" என்று மும்பை இந்தியன்ஸ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

அனில் கும்ளே கூறும்போது, “அபாரமான சில தனி வீரர்களை உயர்ந்த அளவில் திறமையை வெளிப்படுத்தும் அணியாக உருமாற்றிய விதத்தில் முழு திருப்தியுடன் விடை பெறுகிறேன். 3 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை இருமுறையும் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை ஒருமுறையும் வென்றது.

வீரர்கள் மற்றும் என்னுடன் பணியாற்றிய மற்ற பயிற்சியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள், இவர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி நிரம்பியதாகும். தொடர்ந்து சீராக எங்களுக்கு ஆதரவு அளித்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x