Published : 22 Mar 2021 03:12 AM
Last Updated : 22 Mar 2021 03:12 AM
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு நேற்று அணிகள் பிரிவில் 2 தங்கப் பதக்கம் கிடைத்தது.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 3வது நாளான நேற்று ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மன், ரிஸ்வி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதி சுற்றில் 17-11 என்ற புள்ளிகள் கணக்கில் வியட்நாம் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இதேபோன்று மகளிருக்கான அணிகள் பிரிவில் யஷஸ்வின் தேஸ்வால், மனு பாகர், நிவேதா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 16-8 என்ற புள்ளிகள் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.
ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் அணிகள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார், பிரதாப் சிங்தோமர், பங்கஜ் குமார் ஆகியோரைஉள்ளடக்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது. இறுதி சுற்றில் இந்திய அணி 14-16 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT