Last Updated : 14 Mar, 2021 12:54 PM

 

Published : 14 Mar 2021 12:54 PM
Last Updated : 14 Mar 2021 12:54 PM

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை

மிதாலி ராஜ் : கோப்புப்படம்

லக்னோ


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் குவித்த உலகளவில் முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

லக்னோவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 4-வது ஒருநாள் ஆட்டம் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் மிதாலி ராஜ் 26 ரன்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார்.

மிதாலி ராஜ் தற்போது 216வது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார். கடந்த 3-வது ஒருநாள் போட்டியின்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் 3 பிரிவுகளிலும் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையையும், உலகளவில் 2-வது வீராங்கனை எனும் சிறப்பையும் மிதாலி ராஜ் பெற்றார்.

மிதாலி ராஜுக்கு வாழ்த்துத் தெரிவித்து பிசிசிஐ ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் " அற்புதம் மிதாலி! இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார். என்ன அருமையான விளையாட்டு" எனத் தெரிவித்துள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமான மிதாலி ராஜ், ஒருநாள் போட்டியில் முதல்முறையாக 6 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றிருந்தார். இங்கிலாந்து வீராங்கனை சார்லோட்டே எட்வர்ட்ஸ் 5,992 ரன்கள் சேர்த்த நிலையில் ஓய்வு பெற்றுவிட்டநிலையில், அவரின் சாதனையை மிதாலி முறியடித்தார்.

லக்னோவில் நடந்துவரும் 4-வது ஒருநாள் ஆட்டத்தில் மிதாலி ராஜ் 71 பந்தகுளில் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x