Published : 27 Nov 2015 09:58 AM
Last Updated : 27 Nov 2015 09:58 AM
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் அனுமதி அளித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணி களுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை அடுத்த மாதம் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட் டியில் கலந்துகொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அனுமதிக்க கோரி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ஷாஹார்யார் கான் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி இத்தொடரில் விளையாட நவாஸ் ஷெரீப் அனுமதி அளித் துள்ளதாக அந்நாட்டின் பிராந்திய ஒருங்கிணைப்புத்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT