Last Updated : 05 Nov, 2015 07:17 PM

 

Published : 05 Nov 2015 07:17 PM
Last Updated : 05 Nov 2015 07:17 PM

மோசமான மொஹாலி ஆடுகளம்: 4 விக். வீழ்த்திய டீன் எல்கர் அதிருப்தி

மொஹாலியில் இன்று இந்திய அணி 201 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆக காரணமாக இருந்த தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் டீன் எல்கர், பிட்ச் பற்றி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் பிட்ச் பற்றி டீன் எல்கர் கூறியதாவது:

“இது ஒரு நல்ல கிரிக்கெட் பிட்ச் என்று நான் கருதவில்லை. இது என்னுடைய சொந்தக் கருத்தே. ஆனால் முடிவு ஏற்படும் பிட்ச் இது, இங்கு வருவதற்கு முன்பே இவ்வகை பிட்ச்களை எதிர்பார்த்தே வந்தோம். எங்களுக்கு பழக்கமான ஒன்றை விட முற்றிலும் வேறுபட்ட பிட்ச்தான் வழங்கப்படும் என்பதை நாங்கள் அறிவோம். இது நல்ல கிரிக்கெட் பிட்ச் அல்ல. மோசமான பிட்ச்தான். ஆனால் முடிவு தெரியும் பிட்ச். முடிவு எத்தரப்பு பக்கமும் திரும்பலாம்

4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது சற்றே ஆச்சரியம்தான். 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஓரளவுக்கு நன்றாக பேட்டிங்கும் கைகூடியுள்ளது. எனக்கு பந்து வீசும் திறமை உள்ளது. நான் வெறும் பேட்ஸ்மென் மட்டுமல்ல. இந்தியாவை குறைந்த ரன்னுக்கு ஆல் அவுட் செய்ததில் மகிழ்ச்சி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x