Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, ரன்களைக் குவிப்பதில் வல்லவர் என்று எல்லோருக்கும் தெரியும். அதே நேரம் அவரைப் பற்றி அதிகம் தெரியாத விஷயம் ஒன்றும் உள்ளது. கிரிக்கெட்டைப் போலவே பிசினஸ் உலகிலும் விராட் கோலி கெட்டிக்காரர் என்பதே அது.
உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் அதிக ஆர்வம் செலுத்தும் விராட் கோலி, இதையே பிசினஸாகவும் செய்து வருகிறார். ‘சிசெல்’ என்ற பெயரில் நாட்டில் பல்வேறு இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்களை அவர் நடத்தி வருகிறார். மிக விரைவில் நாடு முழுவதும் 75 இடங்களில் இந்த உடற்பயிற்சி கூடங்களை விரிவுபடுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் ‘ராங்’ (Wrogn) என்ற பெயரில் ஃபேஷன் துறையிலும் அவர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
விளையாட்டுத் துறை சார்ந்த தொழில்களிலும் ஆர்வம் செலுத்திவரும் விராட் கோலி, சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக்கில் ‘யுஏஇ ராயல்ஸ்’ அணியையும், புரோ ரெஸ்ட்லிங் லீகில் ‘பெங்களூரு யோதாஸ்’ அணியையும் வாங்கி நடத்தி வருகிறார்.
இத்தனை நிறுவனங்களை நடத்தினாலும் வீட்டில் வேலையாட்களை வைத்துக்கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் விராட் கோலி. வீட்டு வேலைகளை மனைவி அனுஷ்காவுடன் பகிர்ந்துகொள்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளாராம். அத்துடன் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை, கணவன் - மனைவி இருவரும் இணைந்து கவனித்து வருகின்றனர்.
‘கோல்டன் டிராகன்’, ‘சாமுராய் வீரன்’ உள்ளிட்ட 4 உருவங்களை தன் உடலில் பச்சை குத்தி வைத்துள்ளார் விராட் கோலி. இவை தனக்கு அதிர்ஷ்டத்தை தேடித் தரும் என்பது அவரது நம்பிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT