Published : 22 Nov 2015 01:02 PM
Last Updated : 22 Nov 2015 01:02 PM
ஸ்காட்டிஸ் ஓபன் பாட்மிண்டனின் காலிறுதியில் இந்தியாவின் ஆனந்த் பவார் தோல்வியடைந்தார்.
ஸ்காட்டிஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஆனந்த் பவார் 21-12, 10-21, 13-21 என்ற செட் கணக்கில் நம்பர் ஒன் வீரரான டென்மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியன் விட்டிங்ஹஸிடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
இரட்டையர் பிரிவில் இந்தியா வின் மனு அட்ரி-சுமித் ரெட்டி ஜோடி 17-21, 15-21 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் ஆண்ட்ரூ எலிஸ்-பீட்டர் மில்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்த ஆட்டம் 32 நிமிடங்களில் முடிவடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT