Last Updated : 07 Feb, 2021 03:57 PM

 

Published : 07 Feb 2021 03:57 PM
Last Updated : 07 Feb 2021 03:57 PM

2-வது டெஸ்ட்: டிக்கெட் விற்பனை 9-ம் தேதி தொடக்கம்? 8 ஆண்டுக்குப்பின் சேப்பாக்கம் மைதானத்தில் 3 மாடம் திறப்பு


கடந்த 2012-ம் ஆண்டுக்குப்பினஅ முதல் முறையாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஐ,ஜே,கே எனும் 3 பார்வையாளர்கள் மாடம் வரும் 13-ம் தேதி திறக்கப்படுகிறது.

வரும் 13-ம் ேததி இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடக்கும் போது இந்த 3 மாடங்களிலும் பார்வையாளர்கள் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் இந்த 3 மாடங்களையும் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதனால், 2016ம் ஆண்டு டி20 போட்டி, 2019 ஐபிஎல் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்புக் கிடைக்கவில்லை

கடந்த 2012-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் போட்டிக்கு மட்டும் இந்த பார்வையாளர்கள் மாடம் திறக்கப்பட்டது. சேப்பாக்கம் மைதானத்தில் ஒட்டுமொத்தமாக 12 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க முடியும். இந்த 3 மாடங்களில் மட்டும் 4 ஆயிரம் பேர் அமரலாம்.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியைக் காண ரசிகர்களை அனுமதி்க்கலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து, டிக்கெட் விற்பனை வரும் 9-ம் தேதி தொடங்க உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி கூறகையில் “ இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிக்காக 15ஆயிரம் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய இருக்கிறோம்.

அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலம்தான் பெற முடியும். பார்வையாளர்கள் மாடங்களை சுத்தம் படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. 2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அனைத்தும் தயாராகிவிடும். முதல் டெஸ்ட் போட்டியில் ஊடகங்களுக்கு கூட அனுமதியில்லை, ஆனால், 2-வது டெஸ்ட் போட்டியில் ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x