Published : 18 Nov 2015 08:47 AM
Last Updated : 18 Nov 2015 08:47 AM

ஐஎஸ்எல் கால்பந்து: 7 கோல்கள் அடித்து மிரட்டியது கோவா

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று படோர்டாவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை-கோவா அணிகள் மோதின. கோவா அணி 34வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. அந்த அணியின் ஹவோகிப் இந்த கோலை அடித்தார்.

42வது நிமிடத்தில் அந்த அணியின் டூடூ அடித்த கோலால் கோவா அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை வகித்தது. 2வது பாதியிலும் கோவா அணியே ஆதிக்கம் செலுத்தியது. 52வது நிமிடத்தில் ஹவோகிப் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

64 மற்றும் 67வது நிமிடத்தில் டூடூ மேலும் இரண்டு கோல்கள் அடித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மும்பை அணி மீள்வதற்குள் 79வது நிமிடத்தில் கோவா 6வது கோலை அடித்தது. இந்த கோலை ஹவோகிப் அடித்தார். கடை நிமிடத்தில் கோவா அணியின் ரினால்டோ 7வது கோலை அடித்தார். மும்பை அணியால் ஒரு கோல் கூட திருப்பி அடிக்க முடியவில்லை. முடிவில் 7-0 என்ற கோல் கணக்கில் கோவா அணி அபார வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x