Published : 08 Nov 2015 10:13 AM
Last Updated : 08 Nov 2015 10:13 AM
ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழகம்-ஆந்திரா அணிகள் இடையேயான ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆந்திரா 77.2 ஓவரில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரதீப் 78, பாரத் 56 ரன் எடுத்தனர். தமிழகம் தரப்பில் சந்திரசேகர் 4, ரங்கராஜன் 3, கவுசிக் 2, பாபா அபராஜித் 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து ஆடிய தமிழக அணி 1 ஓவரை சந்தித்து ரன் எதும் எடுக்காத நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT