Last Updated : 01 Oct, 2015 10:27 AM

 

Published : 01 Oct 2015 10:27 AM
Last Updated : 01 Oct 2015 10:27 AM

உலகக் கோப்பை தகுதிச்சுற்று: இந்திய கால்பந்து அணி அறிவிப்பு

2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்றில் துர்க் மேனிஸ்தான், ஓமன் அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ள 22 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியில் இடம்பெற்றுள்ள அனைவரும் வரும் 4-ம் தேதி மும்பையில் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டின் முன்னிலையில் ஆஜராக வேண்டும். வரும் 8-ம் தேதி ஆஷ்காபட்டில் நடைபெறும் ஆட்டத்தில் துர்க்மேனிஸ்தானுடனும், 13-ம் தேதி மஸ்கட்டில் நடைபெறும் ஆட்டத்தில் ஓமனுடனும் மோதுகிறது இந்தியா.

அணி விவரம்: கோல் கீப்பர்கள்:

சுப்ரதா பால், கரன்ஜித் சிங், குருபிரீத் சிங் சாந்து.

பின்களம்:

அர்னாப் மான்டல், சந்தேஷ் ஜிங்கான், அய்பர்லேங் கோங்ஜீ, தனசந்திர சிங், லால்சுவான்மாவியா, நாராயணன் தாஸ், ரினோ ஆண்டோ, பிரிதாம் கோதல்.

நடுகளம்:

ஈயூஜென்சன் லிங்டோ, கெவின் லோபோ, சேஹ்னாஜ் சிங், ஜாக்கிசந்த் சிங், பிரணாய் ஹால்டர், பிரான்சிஸ் பெர்னாண்டஸ், ரவ்லின் போர்ஜெஸ், பிகாஷ் ஜெய்ரு.

முன்களம்:

ஜேஜே லால்பெக்குலா, ராபின் சிங், சுனில் சேத்ரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x