

வெற்றி பெற்றேயாக வேண்டிய நிலையில் உள்ள இந்திய அணி சென்னை ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.
பிட்ச் பிற்பாடு மந்தமடைய வாய்ப்புள்ளது, டாஸ் வென்று முதலில் பேட் செய்வதில் நாம் நன்றாக ஆடி வருகிறோம். விரட்டலை நன்றாகச் செய்தாலும், முதலில் பேட் செய்வதே இந்தப் பிட்சில் சிறந்தது என்று கூறினார் தோனி.
இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை.
தென் ஆப்பிரிக்க அணியில் டுமினி, மோர்கெல் காயம் காரணமாக ஆடவில்லை அவர்களுக்குப் பதிலாக ஆரோன் பாங்கிஸோ மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டாஸ் வென்றால் முதலில் பேட் செய்வதே இந்தப் பிட்சில் உசிதம் என்று நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். எனவே இன்னும் சிறிது நேரத்தில் ஷிகர் தவண், ரோஹித் சர்மா களமிறங்கவுள்ளனர்.
மோர்னி மோர்கெல் இல்லை, டுமினி இல்லை, டாஸில் தென் ஆப்பிரிக்கா தோற்றுள்ளது. இது இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.