Published : 19 Dec 2020 08:32 AM
Last Updated : 19 Dec 2020 08:32 AM

பயிற்சியாளர் வைத்து கொள்ள பி.வி.சிந்துக்கு அனுமதி

புதுடெல்லி

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஜனவரி மாதம் பங்கேற்கும் போட்டிகளில் பயிற்சியாளரை வைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஒலிம்பிக் குழுவில் (டாப்ஸ்) உள்ளார்.

இவர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் தாய்லாந்தில் நடைபெறும் இரண்டு போட்டிகள் மற்றும் ஒரு தகுதிப் போட்டியில் பங்கேற்கிறார். இவர் உடல் தகுதிப் பயிற்சியாளரை வைத்துக் கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார். இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான தோராய செலவு ரூ.8.25 லட்சம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x