Last Updated : 29 Oct, 2015 12:48 PM

 

Published : 29 Oct 2015 12:48 PM
Last Updated : 29 Oct 2015 12:48 PM

2007-ம் ஆண்டே ஓய்வு அறிவித்திருப்பேன், சச்சின் என்னை தடுத்தார்: சேவாக்

2007-ம் ஆண்டு அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு உடனடியாக ஓய்வு அறிவிக்க முடிவெடுத்ததாகவும், ஆனால் சச்சின் டெண்டுல்கர் தன்னை தடுத்தததால் அந்த முடிவை கைவிட்டதாகவும் விரேந்திர சேவாக் தெரிவித்தார்.

"எந்த ஒரு வீரரும் அவரது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் ஓய்வு பெறவே விரும்புவார்கள். நானும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய போதே ஓய்வு பெற்றிருந்தால் நானும் பிரியாவிடை உரையாற்றியிருப்பேன். ஆனால் விதி எனக்காக வேறு ஒன்றை வைத்திருந்தது.

2007-ம் ஆண்டு அணியிலிருந்து நீக்கப்பட்டவுடன் ஓய்வு அறிவிக்க முடிவெடுத்தேன். ஆனால் சச்சின் டெண்டுல்கர்தான் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினார்.

2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரின் போது என்னை அணியிலிருந்து நீக்கிய போதே அணித் தேர்வாளர்கள் என்ன செய்யப் போகிறேன் என்று என்னிடம் கேட்டிருந்தால், அந்தத் தொடரிலேயே ஓய்வு அறிவித்திருப்பேன்.

நான் இப்போதும், இனிமேலும் கூட கிரிக்கெட் ஆட்டத்துடன் தொடர்பில்தான் இருப்பேன். வர்ணனை வாய்ப்பு கிடைத்தால் பரிசீலிப்பேன். எனது பேட்டிங் போலவே எனது வர்ணனையும் நேர்மையாக, வெளிப்படையாக கருத்துகளை தெரிவிப்பதாக இருக்கும்.

நான் ஓய்வு பெற்றது குறித்து எனது இரு மகன்களுக்கும் ஏமாற்றம். ஆனால் எனக்கு அதுபற்றி கவலையில்லை. நான் விளையாடிய கேப்டன்களில் அனில் கும்ளே சிறந்தவர், அவர் எங்கள் தன்னம்பிக்கையை மேலும் வளர்த்தெடுத்தவர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு தொடரில் டெல்லி டெஸ்ட் போட்டியின் போது சேவாக் தனது பிரியாவிடை உரையளிக்க வாய்ப்புகள் உள்ளன. பிசிசிஐ-யும் அதனை பரிசீலித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x