Published : 07 Oct 2015 06:05 PM
Last Updated : 07 Oct 2015 06:05 PM
கட்டாக் டி20 போட்டியில் மைதானத்தில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது கிரிக்கெட் ஆட்டத்துக்கு நன்மை பயக்காது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
“அன்றைய தினம் ஆட்டத்தின் போது நடந்தவை நிச்சயமாக கிரிக்கெட்டுக்கு நன்மை பயக்கக்கூடியது அல்ல. இதற்கு முன்பாகவும் இப்படி நடந்துள்ளது. நாம் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் கிரிக்கெட் ஆட்டத்தின் மீது நிறைய நேசம் கொண்டுள்ளோம். நாம் இந்த ஆட்டத்தை அதிகம் நேசிப்பதால்தான் அதிக ஏமாற்றமும், வெறுப்பும் ஏற்படுகிறது.
ஏமாற்றத்தையும் அதிருப்தியையும், வெறுப்பையும் வெளிப்படுத்தும் விதங்கள் உள்ளன. கட்டாக்கில் காண்பிக்கப் பட்டது போன்ற உணர்வுகள் விரும்பத் தகாதது.
எனவே ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி காட்ட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஏமாற்றங்களையும், வெறுப்பையும் வேறு வழிகளில் கையாள முடியும்” இவ்வாறு கூறினார் சச்சின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT