Published : 12 May 2014 12:00 PM
Last Updated : 12 May 2014 12:00 PM

கூடைப்பந்து: சென்னை, கோவை சாம்பியன்

சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற 26-வது மாவட்டங்கள் இடையிலான கூடைப்பந்து போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை அணியும், மகளிர் பிரிவில் கோவை அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி 100-43 என்ற புள்ளிகள் கணக்கில் திருவள்ளூர் அணியைத் தோற்கடித்தது. சென்னை தரப்பில் முத்துக்குமார் 25 புள்ளிகளை பெற்றுத்தந்தார். திண்டுக்கல் அணி 3-வது இடத்தையும், வேலூர் 4-வது இடத்தையும் பிடித்தன.

மகளிர் பிரிவு இறுதிச்சுற்றில் கோவை அணி 60-40 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரோடு அணியைத் தோற்கடித்தது. கோவை வீராங்கனைகள் சானு, செல்வமித்ரா ஆகியோர் முறையே 16 மற்றும் 12 புள்ளிகளைப் பெற்றுத் தந்தனர்.

சென்னை அணி 3-வது இடத்தையும், சேலம் அணி 4-வது இடத்தையும் பிடித்தன.

இரு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000, ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு செயின்ட் ஜோசப் குழும நிர்வாக இயக்குநர் பாபு மனோகரன் பரிசுகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x