Last Updated : 15 Nov, 2020 02:16 PM

 

Published : 15 Nov 2020 02:16 PM
Last Updated : 15 Nov 2020 02:16 PM

 கோலியை வெறுக்கவும் விருப்பம்; பேட்டிங் செய்வதைப் பார்க்கவும் பிடிக்கும்: ஆஸி. கேப்டன் டிம் பைன் கருத்து

விராட் கோலி, ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் : கோப்புப்படம்

சிட்னி


இந்திய அணியின் கேப்டன் கோலி குறித்து ஆஸ்திரேலிய மக்கள் இருவிதமான கருத்துக்களை வைத்துள்ளார்கள். ஒருதரப்பினருக்கும் கோலியை வெறுப்பதில் விருப்பமாக இருக்கிறார்கள், மற்றொரு பிரிவினர் கோலியின் பேட்டிங் செய்வதைக் காண பிடிக்கும் என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின்கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்தார்.

ஆஸஸ்திரேலியாவுக்கு 2 மாதங்கள் பயணமாக கோலி தலைமையில் இந்திய அணியினர் சென்றுள்ளனர். வரும் 27-ம் தேதி ஒருநாள் தொடரும், அதைத் தொடர்ந்து டி20 தொடரும், டிசம்பர் 17-ம் தேதி அடியெல்டில் டெஸ்ட் போட்டித் தொடரும் தொடங்குகிறது.

இந்த தொடரில் அடிலெய்டில் நடக்கும் பகலிரவு டெஸ்டில் மட்டும் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டன் கோலி, அடுத்த 3 போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலியின் மனைவி அனுஷ்காவிற்கு முதல் குழந்தை பிறக்கும் காலம் ஜனவரியில் இருப்பதால் அவருடன் இருக்க வேண்டும் என்பதால், கோலிக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியப் பயணம் செய்து டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச்சாதனை படைத்தது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பைன், கோலி இடையே வாக்குவாதம், மோதல் பல நேரங்களில் ஏற்பட்டது. அப்போதெல்லாம் நடுவர்கள் தலையிட்டு தீர்த்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் ஏபிசி ஸ்போர் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

விராட் கோலி குறித்து என்னிடம் அதிகமான கேள்விகள் இருக்கு. என்னைப் பொருத்தவரை கோலி மற்றொரு அணி வீரர் என்பதால் எனக்கு எந்த கவலையும் இல்லை. உண்மையில் எனக்கு கோலியுடன் நியாயமான நட்புறவு ஏதும் இல்லை. டாஸ் போடும் அவரைக் காண்கிறேன், அதன்பின் அவருக்கு எதிராக ஆடுகிறேன்.

கோலி குறித்து ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. ஆஸ்திரேலிய மக்களில் ஒரு பிரிவினர் விராட் கோலியை வெறுக்க விருப்பமாக இருக்கிறார்கள். ஆனால், அதேசமயம், அவரின் பேட்டிங்கை பார்க்கவும் ரசிகர்களுக்குப் பிடிக்கும். ஆனால், அவர் அதிகமான ரன்கள் அடிக்கப் பார்க்க பிடிக்காது.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டி மிகவும் பரபரப்பானதாக இருக்கும். அதிலும் கோலி கடும் சவாலுக்குரிய வீரர். பலசந்தர்ப்பங்களில் இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்டிருக்கிறோம். அந்த நேரத்தில் அவரும் கேப்டன், நானும் கேப்டன் என்பதால் எல்லை மீறியதில்லை


உலகில் தலைசிறந்த வீரர் களத்தில் விளையாடும் போது நமக்கு எப்போதும் பதற்றம் இருக்கும். அவரை ஆட்டமிழக்கச் செய்யவும் போராடுவோம். இதேபோ இங்கிலாந்தின் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் இருவரும் களத்தில் விளையாடும் போது இதுபோன்று காட்டமான வாக்குவாதம் வரும்.


இந்தியா, ஆஸ்திரேலியத் தொடர் மிகவும் நேர்மையானதாக இருக்கும் என்பதால் மிகவும் எதிர்பார்க்கிறேன். கடந்த முறை எங்களை ஆஸ்திேரலியாவில் வைத்து தோற்கடித்தார்கள். ஆனால், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி அனைத்து ேநரங்களிலும் கட்டமைக்கப்படுவதாக நினைக்கிறேன்.
இவ்வாறு ெபய்ன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x