Published : 29 Oct 2015 10:15 AM
Last Updated : 29 Oct 2015 10:15 AM

ஐஎஸ்எல் கால்பந்து: சுனில் ஷேத்ரி அபாரம்; மும்பை அணி வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை-நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணிகள் மோதின. 25து நிமிடத்தில் மும்பை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய சுனில் ஷேத்ரி எதிரணியின் கோல்கீப்பரை ஏமாற்றி அருமையாக கோல் அடித்தார். இதனால் மும்பை அணி 1-0 என முன்னிலை பெற்றது.

அடுத்த 4வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணி பதில் கோல் அடித்தது. இந்த கோலை அந்த அணியின் போய்தாங் 29வது நிமிடத்தில் அடித்தார். 40வது நிமிடத்தில் மும்பை அணி 2வது கோலை அடித்தது. இந்த கோலையும் சுனில் ஷேத்ரியே அடித்தார். சோனி நார்டி கொடுத்த கிராஸை கோல்கம்பம் அருகே நின்ற சிங்கம் சுபாஸ் தலையால் முட்டி சுனில் ஷேத்ரிக்கு கொடுத்தார். அதை அவர் கோலாக மாற்றினார்.

முதல் பாதியில் மும்பை அணி 2-1 என முன்னிலை வகித்தது. 2வது பாதியின் ஆட்டத்தை மும்பை அணி தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. 48வது நிமிடத்தில் மும்பை அணிக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதையும் நேர்த்தியாக பயன்படுத்தி சுனில் ஷேத்ரி கோலாக மாற்றினார். 51வது நிமிடத்தில் மும்பை வீரர் நார்டி கோல் அடித்து அசத்தினார். அடுத்தடுத்த கோல்களால் நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணி அதிர்ச்சிக்குள்ளானது. 86வது நிமிடத்தில் மும்பை அணி 5வது கோலை அடித்தது. இந்த கோலை பெர்டின் அடித்தார். முடிவில் மும்பை அணி 5-1 என என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இடம்: கொல்கத்தா

நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜெயா மேக்ஸ்.

இன்றைய ஆட்டம்: கொல்கத்தா-டெல்லி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x