Published : 22 Sep 2020 08:31 AM
Last Updated : 22 Sep 2020 08:31 AM

இந்தப் பிட்சிலும் பந்தைத் திருப்ப முடியும் என்று காட்டினார் சாஹல், போட்டியையே மாற்றினார்: விராட் கோலி புகழாரம்

துபாயில் நடந்த ஐபிஎல் தொடர் 3வது போட்டியில் விராட் கோலி தலைமை ஆர்சிபி அணி ஒருவழியாக வெற்றியை ருசித்தது. அதுவும் சன் ரைசர்ஸ் கையில் இருந்த வெற்றிக்கனியை சாஹல் தன் பவுலிங்கின் மூலம் தட்டிப் பறித்தார்.

121/2 என்ற நிலையில் ஒரே ஒவரில் பேர்ஸ்டோ, விஜய் சங்கர் இருவரையும் வெளியேற்றி ஆர்சிபிக்கு மூடப்பட்ட வெற்றிக்கதவுகளைத் திறந்து விட்டார் சாஹல், பிறகு நவ்தீப் சைனி, துரதிர்ஷ்டமான ரன் அவுட், தொடக்கத்தில் வார்னரின் துரதிர்ஷ்ட அவுட் என்று ஆர்சிபிக்கு அதிர்ஷ்டமும் இருந்தது.

இந்நிலையில் ஆட்ட நாயகன் சாஹலைப் புகழ்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோலி கூறியதாவது:

மிகப்பிரமாதம். இந்தப் போட்டிக்கு முன்பாக 0-6 என்ற தோல்வியின் பக்கம் இருந்தோம், இப்போது 1-0 என்று முன்னிலை வகிக்கிறோம்.

சாஹல் வந்தார் போட்டியையே மாற்றி விட்டார். இந்தப் பிட்சில் வேறு எந்த ஸ்பின்னரும் எதையும் பெற முடியாது. ஆனால் மணிக்கட்டு ஸ்பின் சாகசம் புரியும் என்பதை சாஹல் நிரூபித்தார். போட்டியையே மாற்றி விட்டார். தேவ்தத் படிக்கால் அறிமுகப் போட்டியில் அசத்தினார். பிஞ்சும் நன்றாக ஆடினார்.

இன்னும் 10-20 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். பகுதி நேர வீச்சாளர்கள் நன்றாக வீசுவது நல்ல அறிகுறி.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x