Published : 13 Jun 2020 06:08 AM
Last Updated : 13 Jun 2020 06:08 AM

தோட்டத்தில் மயங்கி கிடந்த பறவையை காப்பாற்றிய தோனி: இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மகள் ஜிவா

தனது தந்தை ஒரு சிறிய பறவையைக் காப்பாற்றியது குறித்து தோனியின் மகள் ஜிவா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

தோனியின் மகள் ஜிவாவுக்குஇன்ஸ்டாகிராமில் தனி கணக்கு உள்ளது. அதில், ஒரு சிறிய பறவையைத் தன் தந்தை காப்பாற்றியது குறித்து பதிவு எழுதியுள்ளார் ஜிவா.

அதில் அவர், ‘எங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு பறவை நினைவின்றி மயங்கிக் கிடந்ததைப் பார்த்தேன். உடனே என் அப்பா, அம்மாவை அழைத்தேன். எனது அப்பா, அந்தப் பறவையைக் கையில் எடுத்துஅதற்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அதுகண் விழித்தது. இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.

பிறகு ஒருகூடையில் இலைகளைப் போட்டுஅதில் அதை அமரவைத்தோம். பறவையின் பெயர் காப்பர்ஸ்மித் என அம்மா சொன்னார். அந்தபறவை திடீரென பறந்து சென்றுவிட்டது. அது என்னுடனேயே இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். அது தனது அம்மாவிடம் சென்றுவிட்டதாக என் அம்மா கூறினார்.அதை மீண்டும் பார்ப்பேன் என நம்பிக்கையுடன் உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x