Published : 10 Jun 2020 04:25 PM
Last Updated : 10 Jun 2020 04:25 PM

இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் கலந்த அணி எப்படி இருக்கும்? - பாபர் ஆஸம் வெளியிட்ட  சுவாரஸ்ய லெவன்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஆஸம் தனது இந்திய-பாக் கலந்த டி20 அணியில் விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

தனது அணியில் ஹர்திக் பாண்டியா, ஷோயப் மாலிக் இருவரையும் ஆல்ரவுண்டர்களாகத் தேர்வு செய்துள்ளார் பாபர். இந்தக் கூட்டணியில் இந்தியாவிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே ஒரே வேகப்பந்து வீச்சாளர்.

ஹர்ஷா போக்லேவுடன் கிரிக்கெட் ஊடகம் ஒன்றுக்காக பேசிய போது இந்திய-பாகிஸ்தான் இணைந்த டி20 அணியைத் தேர்ந்தெடுக்க போக்லே கேட்க உடனே தெர்ந்தெடுத்தார் பாபர் ஆஸம்.

இந்திய அணியிலிருந்து ஸ்பின்னர் குல்தீப் யாதவையும் தன் அணியில் சேர்த்துள்ளார் பாபர் ஆஸம்.

அணி விவரம்:

ரோஹித் சர்மா, பாபர் ஆஸம், விராட் கோலி, ஷோயப் மாலிக், தோனி, ஹர்திக் பாண்டியா, ஷதாப் கான், முகமது ஆமிர், ஷாஹின் அஃப்ரீடி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x