Published : 28 Apr 2020 12:06 PM
Last Updated : 28 Apr 2020 12:06 PM

டாப் பிளேயர்: சேவாக், யுவாராஜ் சிங் போல் ஆதிக்கம் செலுத்துகிறார், திராவிடையும் நினைவூட்டுகிறாராம்- ரிஷ்ப பந்த் குறித்து சுரேஷ் ரெய்னா

ரிஷப் பந்த் பேட்டிங் விக்கெட் கீப்பிங் குறித்து பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா அவரைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் லைவ் அரட்டையில் சாஹலிட சுரேஷ் ரெய்னா கூறியதாவது:

ரிஷப் பந்த் டாப் கிரிக்கெட் வீரர். அவர் நன்றாக ஆடினால் மகிழ்ச்சியாக இருக்கும். நன்றாக ஆடும்போது யுவராஜ், சேவாக் போல் ஆதிக்கம் செல்த்தும் வீரராக உள்ளார். அவர் பிளிக் ஷாட் ஆடும்போது திராவிடையும் நினைவூட்டுகிறார்.

விராட் கொலி ஒரு திடமான கேப்டன், அவரிடம் நிறைய ஆற்றல் உள்ளது. அவர் விஷயங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். குறுகிய வடிவப் போட்டிகளில் ஆடும்போது நிறைய எனெர்ஜி தேவை, என்றார் ரெய்னா.

கடைசியாக ரிஷ்ப பந்த் நியூஸிலாந்தில் நடந்த 2 போட்டிகளில் 60 ரன்களை மட்டுமே எடுத்தார். ஆனால் கேப்டன் விராட் கோலி 2 டெஸ்ட்களில் 38 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது, கோலியை சொல்லி சொல்லி எடுத்தனர் நியூஸி. பவுலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x