Published : 31 Aug 2015 06:37 PM
Last Updated : 31 Aug 2015 06:37 PM

மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா பெயரில் இந்திய-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர்கள்

இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் இனி மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா தொடர் என்ற பெயரிலேயே நடத்தப்படும்.

இதனை இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன.

இது குறித்து பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் கூறும்போது, “இந்த நாட்டின் குடிமக்கள் சார்பாக, பிசிசிஐ, இருநாட்டு மிகப்பெரிய தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய-தென் ஆப்பிரிக்க தொடர்களுக்கு மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா தொடர் என்ற பெயரை சூட்டுகிறது" என்றார்.

கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவின் தலைமை அதிகாரி ஹாருண் லோர்கட் கூறும்போது, “இரு நாட்டு மக்களுக்கும் மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகிய பெரும் தலைவர்களின் லட்சியங்களை கடைபிடிப்பதை விட பெரிய கடமை வேறு இருக்க முடியாது. கிரிகெட்டை நேசிக்கும் நாம், களத்தில் சவாலாக திகழ வேண்டும் ஆனால் அதே வேளையில், இந்த இரு மகாத்மாக்களின் உணர்வுடன் விளையாட வேண்டும்” என்றார்.

டெஸ்ட் தொடர் ‘சுதந்திர கோப்பை’ (Freedom Trophy) என்ற பெயரில் நடத்தப்படவுள்ளது.

இந்தியாவில் மிக நீண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அக்டோபர் மாதம் முதல் விளையாடுகிறது, இந்தத் தொடரே காந்தி-மண்டேலா தொடர் என்றே அழைக்கப்படும்.

3 டி20, 5 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடராகும் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x