Published : 27 Aug 2015 10:09 AM
Last Updated : 27 Aug 2015 10:09 AM

ராயுடு அபாரம்; இந்தியா-342/6

தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 88 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வயநாட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 89.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வான் ஸில் 96 ரன்கள் குவித்தார். இந்தியத் தரப்பில் அக் ஷர் படேல் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

2-வது நாளான நேற்று முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ஜிவோன்ஜித் சிங்-அபினவ் முகுந்த் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தியது. ஜிவோன்ஜித் 52 ரன்களும், முகுந்த் 72 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த அபராஜித் 34, ஜாக்சன் 25, சங்கர் 21 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் அம்பட்டி ராயுடு 81 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் குவித்தார். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 88 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்துள்ளது. அங்குஷ் பெய்ன்ஸ் 34, அக் ஷர் படேல் 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் பீடெட் 4 விக்கெட்டுகளையும், சோட்சோபி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x