Last Updated : 26 Mar, 2020 11:41 AM

 

Published : 26 Mar 2020 11:41 AM
Last Updated : 26 Mar 2020 11:41 AM

உலகின் மிகப்பெரிய கால்பந்து மேதை பிலேயிடமிருந்து  கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு

தற்போதைய கால்பந்தாட்டத்தில் உலகிலேயே மிகச்சிறந்த வீரர் போர்ச்சுக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் என்று உலகின் தலைசிறந்த கால்பந்து மேதையான பிரேசிலின் பிலே தெரிவித்துள்ளார்.

ஆனால் ரொனால்டோவும் சரி, மெஸ்ஸியும் சரி தான் ஆடிய காலக்கட்டத்தில் தன்னை விட சிறப்பாக ஆடவில்லை என்றும் பிலே தெரிவித்துள்ளார்.

“இப்போதைக்கு கடந்த 10 ஆண்டுகளாக சீராக ஆடிவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் பெஸ்ட். மெஸ்ஸியையும் மறக்கலாகாது. ஆனால் ஒரேயொரு கிங்தான் இருக்க முடியும் அது பிலேதான்” என்று அவரே தன்னைப் பற்றி பெருமையாகக் கூறிக்கொண்டார்.

அவரது பட்டியலில், ஜீகோ, ரொனால்டீனியோ, ரொனால்டோ நசாரியோ, பிரான்ஸ் பெக்கென்பாயர் ஜோஹன் கிரையஃப் ஆகியோர் சிறந்த வீரர்களாக உள்ளனர்.

3 உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கால்பந்து மேதை பிலே மட்டுமே, 22 ஆண்டுகால கால்பந்தாட்டத்தில் அவர் 1,000த்திற்கும் மேலான கோல்களை அடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x