Last Updated : 25 Mar, 2020 10:50 AM

 

Published : 25 Mar 2020 10:50 AM
Last Updated : 25 Mar 2020 10:50 AM

கரோனா வைரஸ்: பார்சிலோனா மருத்துவமனைக்கு கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 10 லட்சம் யூரோக்கள் நன்கொடை

கரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ள அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்சி ஒரு மில்லியன் யூரோக்களை பார்சிலோனா மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கோல்.காம் செய்திகளின் படி மருத்துவமனை கிளினிக்கு மெஸ்ஸி இந்த நன்கொடையை வழங்கியுள்ளார், இது பார்சிலோனாவின் பொது மருத்துவமனையாகும்.

மெஸ்ஸியின் முன்னாள் பார்சிலோனா மேலாளர் பெப் குவார்டியோலாவும் ஒரு மில்லியன் யூரோக்கள் நன்கொடை அளித்துள்ளார்..

அதே போல் போர்த்துக்கீசிய கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவரது ஏஜெண்ட் யோர்ஹே மெண்டெஸ் என்பவரும் ஒரு மில்லியன் யூரோக்களை லிஸ்பன் மற்றும் போர்ட்டொவில் உள்ள மருத்துவமனைகள்க்கு அளித்துள்ளார்.

கரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தைக் கையிலெடுத்த உலகக் கால்பந்துக் கூட்டமைப்பான ஃபீபா 28 வீரர்கள் பேசும் 13 மொழியிலான வீடியோவை தயாரித்துள்ளது, இதில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரியும் ஒருவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x