Published : 23 Mar 2020 08:55 AM
Last Updated : 23 Mar 2020 08:55 AM
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள விளையாட்டு அமைப்புகள் ஒலிம்பிக் போட்டிகளை இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளன. இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் முற்றிலும் மறையும் வரை ஒலிம்பிக் நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையுடன் கனடா நாடு ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கருதி ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக கனடா ஒலிம்பிக் கமிட்டி, கனடா பாராலிம்பிக் கமிட்டி ஆகியவை அறிவித்துள்ளன.
மேலும் ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்கு தள்ளி வைக்கவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் கனடா கோரிக்கை வைத்துள்ளது.
கோவிட்-19 மற்றும் அது தொடர்பான இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் கனடா தெரிவித்துள்ளது.
உலகம் முழுதும் கரோனா வைரஸ் 3,37,000 பேருக்கு பரவியுள்ளது. 14,500 பேர் பலியாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT