Last Updated : 13 Mar, 2020 06:12 PM

 

Published : 13 Mar 2020 06:12 PM
Last Updated : 13 Mar 2020 06:12 PM

கரோனா அச்சுறுத்தல்: தாய்நாடு திரும்பும் தெ.ஆ. அணியினர்: ஒருநாள் தொடர் ரத்து 

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இந்தியாவில் 81 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் பலியானதையடுத்து இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதல் போட்டி நேற்று தரம்சலாவில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது, இந்நிலையில் மீதமுள்ள 2 போட்டிகளும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

“ஐபிஎல் கிரிக்கெட் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து இந்தத் தொடரை நடத்துவதில் அர்த்தமில்லை. எனவே நாடு ஒரு கொள்ளை நோயை எதிர்கொண்டிருக்கும் நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்படுகிறது” என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்க அணி இதனையடுத்து டெல்லி வந்து உடனடியாக தென் ஆப்பிரிக்கா திரும்புகின்றனர்.

ரசிகர்களே இல்லாமல் நடத்தலாம் என்று முதலில் முடிவெடுக்கப்பட்டது, ஆனால் திடீரென இன்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலக அளவில் கரோனா வைரஸ் பலி 5,000-ஐ கடந்து விட்டது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100,000-த்தைக் கடந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x