Last Updated : 15 Feb, 2020 07:29 PM

 

Published : 15 Feb 2020 07:29 PM
Last Updated : 15 Feb 2020 07:29 PM

தேசிய ஸ்குவாஷ்: 18-வது முறையாக ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்; சவுரவ் கோஷலுக்கு 13-வது பட்டம்

சென்னையில் நடந்த சீனியர்களுக்கான தேசிய அளவிலான 77-வது ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா 18-வது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

ஆடவர் பிரிவில் சவுரவ் கோஷல் 13-வது சாம்பியன் பட்டத்தை வென்றார்.

சென்னையில் 77-வது சீனியர் ஸ்குவாஷ் போட்டிகள் நடந்தன. இதில் இன்று மகளிர், ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப்போட்டிகள் நடந்தன.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தான்வி கண்ணாவை எதிர்த்துக் களமிறங்கினார் ஜோஷ்னா சின்னப்பா. இதில் தான்வி கண்ணாவை 8-11, 11-6, 11-4, 11-7 என்ற கணக்கில் வீழ்த்தி 18-வது சாம்பியன் பட்டத்தை ஜோஷ்னா கைப்பற்றினார். தொடக்கத்தில் முதல் செட்டை இழந்த ஜோஷ்னா அதன்பின் சுதாரித்து ஆடி வாகை சூடினார்.

16-தேசிய சாம்பியன் பட்டங்களை புவேஷ்வரி குமார் பெற்றிருந்ததைக் கடந்த ஆண்டு ஜோஷ்ணா புனேயில் முறியடித்தார். இந்த முறை 18-வது சாம்பியன் பட்டத்தை ஜோஷ்னா வென்றுள்ளார். கடந்த 2000-ம் ஆண்டில் தனது முதல் சாம்பியன் பட்டத்தைவென்ற ஜோஷ்ணா, இரு முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளார், அந்த இருபோட்டிகளும் இறுதிப்போட்டிகளாகும்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள அபிஷேக் பிரதானை 11-6, 11-5, 11-6 என்ற செட்களில் வீழ்த்தினார் சவுரவ் கோஷல். இது அவருக்கு 13-வது சாம்பியன் பட்டமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x