Published : 10 Feb 2020 08:18 PM
Last Updated : 10 Feb 2020 08:18 PM
யு19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேச யு19 வீரர்கள் வெற்றிப் பெருமிதத்தில் வங்கதேச ரசிகர்களைக் குஷிப்படுத்த மைதானத்தைச் சுற்றி வந்த போது ரசிகர்கள் உற்சாகமாக மைதானத்தில் விட்டெறிந்த பாட்டில்கள் மற்றும் பிற குப்பைகளை சாம்பியன் வீரர்கள் அகற்றியது சமூகவலைத்தளத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் உலகக்கோப்பையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் உலக சாம்பியன் ஜூனியர் வீரர்கள் குப்பைகளை அகற்றும் வீடியோவை வெளியிட்டு அவர்கள் பொறுப்புணர்வை பாராட்டியுள்ளது.
ஆனால் வெற்றிக்குப் பிறகு அசிங்கமான நிகழ்வுகளும் நடந்தது வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சாளர் இஸ்லாம் இந்திய வீரர்களை வசை பாடியதும் இருதரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்படும் பதற்றமான சூழ்நிலைகளும் ஏற்பட்டன.
ஆனால் நடந்த சம்பவங்களுக்காக வங்கதேச ஜூனியர் கேப்டன் அக்பர் அலி மன்னிப்புக் கேட்டார், இந்திய கேப்டன் கார்க் வருத்தம் தெரிவித்தார்.
இந்திய வீரர்கள் மொகமது கைஃப், ஜெயதேவ் உனாட்கட் ஆகியோர் வங்கதேச வீரர்களைப் பாராட்டியுள்ளனர்.
TRUE CHAMPIONS
Bangladesh players, during their victory lap, pick up and move aside the litter thrown onto the field!
Classy. #U19CWC | #FutureStars pic.twitter.com/JJV17MbDZK
— Cricket World Cup (@cricketworldcup) February 10, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT