Published : 29 Jan 2020 07:02 PM
Last Updated : 29 Jan 2020 07:02 PM
ஹேமில்டன் டி20 போட்டியில் முதலில் 40 பந்துகளில் 65 ரன்களை வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மா, பிறகு சூப்பர் ஓவரில் சவுத்தியின் கடைசி 2 பந்துகளில் அபாரமான 2 சிக்சர்கள் மூலம் இந்தியாவுக்கு தொடரை வெற்றி பெற்றுக் கொடுத்தார்.
எவ்வளவோ டி20 போட்டிகளில் ஐபிஎல்-களில் ஆடிய ரோஹித் சர்மா இதுவரை இந்தப் போட்டிக்கு முன்பாக சூப்பர் ஓவரில் ஆடியதில்லை.
இன்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட ரோஹித் சர்மா, கூறியதாவது:
சூப்பர் ஓவரில் இதற்கு முன்பாக பேட் செய்ததில்லை. எதை எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை. அதாவது முதல் பந்திலிருந்தே அடிப்பதா, அல்லது சிங்கிள் எடுப்பதா என்பது புரியவில்லை.
இது நல்ல ஆட்டம். ஆனால் நான் முதலில் ஆட்டமிழந்த விதம் குறித்து சற்றே ஏமாற்றமடைந்தேன். இன்னும் சிறிது கூடுதலாக களத்தில் நிற்க வேண்டும் என்று பிரியப்பட்டேன்.
இந்தப் போட்டியை வென்றால் தொடரை வெல்வோம் என்ற முனைப்பில்தான் ஆடினோம். ஆகவே அணியின் முக்கிய வீரர்கள் இந்த முக்கியமான ஆட்டத்தில் தங்களை மேம்படுதத வேண்டும் என்று கருதினோம், அதுதான் நடந்தது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT